திங்கள், 8 ஜூன், 2009

”சுடருள் இருள்”


கனடாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக, இலக்கிய நிகழ்வுகளில் எமது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து “சுடருள் இருள்” என்கிற இலக்கிய நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு “ஸ்கார்பறோ சிவிக் சென்ரர்” இல் நடாத்த உள்ளோம்.

ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

(மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழின் மேல் அழுத்தவும்)

1 கருத்துரைகள்:

  1. வணக்கம் தீபச்செல்வன்

    சுடருள் ஒளி நிகழ்வில் கலந்து கொண்டேன். தங்கள் கவிதைத் தொகுப்பான பதுங்குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதைத் தொகுதிக்கான விமர்சனங்களின் பின்னர் தாங்கள் அனுப்பி வைத்த கடிதமும் நிகழ்ச்சி ஒழுங்காளர் ஒருவரான சுதனால் வாசிக்கப்பட்டது. தங்கள் கடிதம் என கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அது ஒன்றை மட்டுமே செய்யக்கூடிய கையறு நிலையில்தான் பல புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
    தங்கள் கவிதைகளின் ஒவ்வொரு வரியும் வன்னி மக்களின் நிலையை துல்லியமாக எடுத்துக் கூறிகின்ற போதும் என் போன்றவர்களுக்கு அவை கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருப்பதை இட்டு நான் வெட்கிப் போகின்றேன். தனிப்பட்ட முறையில் நான் ஒன்றும் செய்யவில்லையே என்பதும், என்ன செய்வது என்ற தெரியாத நிலையும் குற்ற உணர்வாகித் தினம் தினம் அரிக்கின்றது.
    சுடருள் ஒளி நிகழ்வின் பின்னர் நிகழ்வு ஒழுங்காளர்களுடன் சேர்ந்திருந்து பல மணிநேரங்கள் தங்களைப் பற்றியும் தங்கள் கவிதைகள் பற்றியும் உரையாடினோம். கூடிக் கூடி உரையாடுவதும் பின்பு இயல்பான வாழ்விற்குத் தள்ளப்படுவதுமே புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாகிப் போயிற்று.

    உங்கள் கவிதைகளுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக தங்கள் கடிதம் என்னை மிகவும் பாதித்தது.

    அன்புடன்

    சுமதி ரூபன்

    பதிலளிநீக்கு