செவ்வாய், 23 மார்ச், 2010

எழுத்தாளர் சார்க் கூடல் கலந்து கொள்ளவில்லை -அடுத்த வருடம் நடைபெறும் மாநாட்டுக்கு நிச்சயமாக நான் கலந்து கொள்கிறேன்




 
அன்பின் AJEET

தாங்கள் என்னை எழுத்தாளர் மாநாட்டுக்கு அழைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக எனது அன்பான நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு இந்த மாநாட்டுக்கு வர முடியாத துர்பாக்கிய நிலையிருப்பதை தங்களுக்கு அறிவிப்பதில் மிகவும் கவலையடைகிறேன்.

நான் தற்பொழுதுதான் படிப்பை நிறைவு செய்து விட்ட இன்னும் ஒரு வேலை கிடைக்காத நிலையில் உள்ளேன். எனது குடும்பமான தாயாரும் சகோதரி ஒருவரும் இன்னும் சொந்த ஊருக்குச் செல்லாமல் தடுப்பு முகாமிலேயே உள்ளார்கள். ஏற்கனவே பொருளாதார நிலையில் மிகவும் மோசமாக இருந்தேன். எனது சில புலம்பெயர்ந்த - எழுத்தாளர் - நண்பர்களது உதவியுடன்தான் எனது படிப்பை முடித்திருக்கிறேன். இந்த நிலையில் என்னால் தங்கள் மாநாட்டுக்கு கலந்து கொள்ள முடியாத நிலமையிருக்கிறது. இதனாலேயே பயண கடவுச் சீட்டைக்கூட என்னால் பெற முடியாதிருந்தது. பதில் அனுப்புவதற்கும் தயக்கமாக இருந்தது.

அடுத்த வருடம் நடைபெறும் மாநாட்டுக்கு நிச்சயமாக நான் கலந்து கொள்கிறேன். அதற்கான உங்கள் அழைப்புக்காக காத்திருப்பதுடன் இம்முறை பகிர வேண்டிய என் உணர்வுகளை அடுத்த வருடன் அங்கு பகிர்ந்து கொள்வேன். இதனால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிக்க வேண்டும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

LOVE

DEEBACHELVAN



DEAR AJEET COUR,

I FEEL VERY HAPPY TO RECEIVE YOUR KIND INVITATION FOR THE WRITERS' CONFERENCE. IT IS REALLY UNFORTUNATE THAT I AM NOT IN A POSITION TO ACCEPT IT WHICH MAKES ME FEEL REAALY SAD.i HAVE JUST NOW FINISHED MY COLLEGE STUDIES AND AM YET TO GET A JOB. MY MOTHER AND YOUNGER SISTER WHO ARE MY FAMILY ARE STILL LANGUISHING IN THE DETENTION CAMP. EVEN PREVIOUSLY WE WERE NOT A FINANCIALLY SOUND FAMILY AND IT WAS WITH THE HELP OF MY FRIENDS AND WELL-WISHERS LIVING ABROAD THAT I COULD CONTINUE AND COMPLETE MY HIGHER STUDIES. IN THIS SITUATION I AM NOT IN A POSITION TO COME TO THE CONFERENCE.IN FACT MY SITUATION IS SUCH THAT I HAVE NOT BEEN ABLE TO GET MY PASS-PORT TOO. I FELT RATHER EMBARASSED TO SEND YOU THIS REPLY.

NEXT YEAR I WILL DEFINITELY TAKE PART IN THE WRITERS' MEET. I WILL BE EAGERLY WAITING FOR YOUR INVITATION NEXT YEAR AND WILLINGLY SHARE WITH THE AUDIENCE ALL THAT I HAVE WANTED TO SHARE WITH THEM. I SINCERELY FEEL SORRY FOR THE INCONVENIENCE CASUED BY ME TO YOUR GOODSELF IN THIS REGARD AND I WISH THE CONFERENCE A GREAT SUCCESS.

LIVING IN THE HOPE THAT THINGS WOULD IMPROVE.

WITH REGARDS

YOURS SINCERELY

DEEBACHELVAN

Cc: ANAR

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக