புதன், 30 ஜூன், 2010
தீபச்செல்வனின் : ‘பாழ் நகரத்தின் பொழுது’ : கவிதைப் புத்தகம் வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து நடத்தும்
தீபச்செல்வனின்
‘பாழ் நகரத்தின் பொழுது’
கவிதைப் புத்தகம் வெளியீடு
03.07.2010 சனிக்கிழமை
இடம் : இக்சா மையம்
கன்னிமரா நூலகம் எதிரில், எழும்பூர், சென்னை.
நூல் வெளியிடுபவர் : கவிஞர் பெருந்தேவி
பெற்றுக்கொள்பவர் : ஆவணப்பட இயக்குனர் சோமிதரன்
__________________________________________
“இன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஒன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது.
பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்தக் கவிதைகள் பேசுகின்றன ”
(காலச்சுவட்டிற்காக சுகுமாரன், திருவனந்தபுரம், கேரளா)
“பாழ் நகரத்தின் பொழுது” தீபச்செல்வனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இத் தொகுப்பிலுள்ள கவிதைகளில் பெரும்பான்மையானவை யாழ்ப்பாணத்தைப் பற்றியவை. யாழ்ப்பாணம் எப்போதும் அச்சப்பிராந்தியமாகவே இருந்து வந்திருக்கின்றது. அதன் பிரதான வாயிலான ஏ-9 வீதி நிரந்தரமற்ற கனவின் இழையில் தொங்கிக்கொண்டேயிருக்கின்றது. சமாதான காலத்தில் சொர்க்கத்தின் வாயிலாக இருந்த இந்த வழி , யுத்தப் பிரகடனத்திற்காக மூடப்பட்ட போது மரணத்தின் இரும்புத் திரையானது. யுத்தம் மீண்டும் ஆரம்பித்தபோது யாழ்ப்பாணத்திற்கான உணவு விநியோகம் உட்படப் பலவும் பாதிக்கப்பட்டிருந்தன. முற்றிலும் இராணுவமயமான அன்றைய யாழ்ப்பாணத்தில் எப்போதும் மரணத்தின் நிழல் சதா அலைந்து கொண்டேயிருந்தது”
(பாழ் நகரத்தின் பொழுது : முன்னுரை : சித்தாந்தன், யாழ்ப்பாணம்)
“பாழடைந்த நகரத்தில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட என்னுடன் பழகுவது சேர்ந்து திரிவது எல்லாமே அபாயமான விடயமாகிய பொழுது நிறையப்பேர் என்னை விட்டு ஒதுங்கிய பொழுது எனக்கு ஆறுதல் அன்பு தந்த நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். என்னுடன் அச்சுறுத்தும் நகரத்திற்கு வந்தவர்கள், தங்கள் சைக்கிள்களில் ஏற்றித் திரிந்தவர்கள், அவர்கள் என்னை பாதுகாக்கும் சுவரைப்போல என்னைச் சுற்றி நின்றார்கள”
(பாழ் நகரத்தின் பொழுது : என்னுரை : தீபச்செல்வன், கிளிநொச்சி)
__________________________
இந்த வெளியீட்டு நிகழ்வில் காலச்சுவடு பதிப்பகம் மற்றும் தமிழியல் இணைந்து ஈழத்தைச்சேர்ந்த எட்டு படைப்பாளிகளின் நூல்கள் வெளியிடுகின்றன
__________
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக